அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாங்கள் தீர்வை முன்வைப்போம்:அமைச்சர் கம்மன்பில
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தவறினால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து தீர்வை முன்வைத்து அதனை மக்கள் மயப்படுத்த போவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நெருக்கடி இருக்கின்றது என்பதை முதல் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் நீள, அகலத்தை ஆராய வேண்டும். அதன் பின்னர் அதற்கான தீர்வை தேட வேண்டும்.
அப்படி முன்வைக்கப்படும் தீர்வை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கம் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வாறு முன்வைக்கும் தீர்வுக்கு அர்ப்பணிப்பை செய்யும் அதேவேளை அரசியல்வாதிகள் தமது அர்ப்பணிப்பை செயலில் காட்ட வேண்டும்.
அடுத்த மாத காலத்திற்குள் இந்த செயற்பாடு நடக்க வேண்டும்.
இந்த யோசனையை அரசாங்கம் முன்வைக்கும். ஒரு மாதத்தில் அது நடக்கவில்லை என்றால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து முன்வைக்கும் தீர்வை மக்கள் மயப்படுத்த போவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri