அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis Strike Sri Lanka Northern Province of Sri Lanka
By Shan Apr 24, 2023 12:07 PM GMT
Report

கொடுமையான ஒரு சட்டத்தை தற்போது கொண்டு வர முற்படுகிறார்கள், அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு ரீதியில் நாளையதினம் (25.04.2023) இடம்பெறவுள்ள நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுபிரசுரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

எங்கள் மீது திணிப்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிகக் கொடூரமான ஒரு சட்ட மூலத்தை எதிர்த்தும், கடந்த காலத்திலே எம்முடைய இனம் இதற்காக முகம் கொடுத்து எங்களுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வகை, தொகையின்றி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டதும், சிறைகளிலே கொல்லப்பட்டதும், இன்றும் சிறைகளிலே வாடி வருவதற்கும் காரணமாக இருந்துள்ளது.

எங்களுடைய மக்களுடைய அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் அதை நீக்குமாறு நாங்கள் பல தரப்புகளிடம் போராடிய போது இன்று சர்வதேச மட்டத்திலே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குமாறு அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படுகிறது.

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

அதற்கு பதிலாக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று அதைவிட மிகக் கொடுமையான ஒரு சட்டத்தை இப்பொழுது கொண்டு வர முற்படுகிறார்கள்.

முழு கடையடைப்பு

அதை நாங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலே, இன்று இந்த போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

நாளைய தினம் ஒரு முழு கடையடைப்பு எங்களுடைய தாயக பிரதேசத்திலே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில் முடக்கம், செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம்.

அதற்கு அடுத்ததாக எங்களுடைய சுய நிர்ணய உரிமையை அழித்து ஒழிக்கின்ற, எங்களுடைய குடிப்பரம்பலை சிதைக்கின்ற, தமிழினம் இந்த நாட்டிலே தொன்மையான இனம் என்ற வரலாற்றை அழித்தொழிக்கின்ற நடவடிக்கையாக அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

எங்களுடைய தமிழின தொன்மை தொல்லியல் ஆவணங்களை சிதைக்கின்ற குறிப்பாக சிவாலயங்களையும் மற்றும் சைவ ஆலயங்களையும் சிதைப்பதன் மூலம் எங்களுடைய தொல்லியல் அல்லது எங்களுடைய தொன்மையான இருப்புக்கான ஆதாரங்களை அழித்தொழிக்க முடியும் என்ற நடவடிக்கையிலே அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து கதவடைப்பு போராட்டத்தை கோரி நிற்கின்றோம்.

மக்களுடைய ஆதரவு

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

இது முடிவல்ல அரசியல் கட்சிகள், சமய அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை எங்களுடைய தாயக பிரதேசத்திலே முன்னெடுப்பதாக சங்கர்ப்பம் பூண்டுள்ளோம்.

முதல் கட்டமாக இந்த கதவடைப்பு அல்லது நிர்வாக முடக்கல் அல்லது தொழில் முடக்கம், சேவை முடக்கம் என்ற இந்த போராட்டத்தை நாளைய தினம் நடத்த இருக்கிறோம்.

இதனை வெற்றிகரமாக அமைவதற்கு உங்கள் அனைவருடைய ஆதரவையும் ஊடகங்களின் ஊடாக கோரி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US