சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீற முடியாது! சமந்த வித்தியாரட்ன
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீற முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை முறித்துக் கொள்ள முடியாது.
உடன்படிக்கை
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாட்டுக்கு கிடைக்கக்கூடிய விடயங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள உடன்படிக்கைகளில் சில சில திருத்தங்களை செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத்த கட்ட கடன்தொகையை பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களில் தீவிரம் காட்டப்பட்டு வருவதாக சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri