மகாநாயக்க தேரர்களின் முடிவுகளை நாம் கேள்விக்குட்படுத்தவே முடியாது! முன்னாள் ஜனாதிபதி மகிந்த வலியுறுத்து
மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துக்களையும் எடுக்கும் முடிவுகளையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சரியா தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல என்பதால், அதனை நம்மால் ஒருபோதும் கேள்விக்குட்படுத்த முடியாது" என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்" திறப்பு விழா நேற்று மாலை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
எழுந்துள்ள சர்ச்சை
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

இவ்வருடம் மே மாதத்தில் இரண்டு வெசாக் போயா தினங்கள் வருவது குறித்து பௌத்த சமூகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சை மற்றும் கலந்துரையாடல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:
"மகாநாயக்க தேரர்கள் ஒரு விவகாரம் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுத்திருந்தால், நாம் அதற்கு முழுமையாக இணங்கி, தலைவணங்கிச் செயல்பட வேண்டும். அதில் தர்க்கங்களுக்கு இடமில்லை.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்
வெசாக் பண்டிகை
மேலும், இம்முறை வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்து வினவினால், நான் எப்போதும் போல சாதாரணமான முறையிலேயே இம்முறையும் வெசாக் தினத்தைக் கொண்டாடவுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நடைபெற்ற இந்த உன்னத புண்ணிய உற்சவத்தில், அமரபுர தர்ம ரக்ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய வதகெதர விமல புத்தி அநுநாயக்க தேரரின் திருக்கரங்களால் புதிய தாது மந்திர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான பௌத்த மக்களும் கலந்துகொண்டு பக்திப் பெருக்குடன் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam