இலங்கையில் முடிவுக்கு வந்த நடைமுறை! பணத்தை அச்சிட முடியாது என அரசாங்கம் அறிவிப்பு
கடனைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சகல அரசாங்கங்களும் பணத்தை அச்சிட்டதாக, வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடன்களை பெற்றன. கடன்கள் போதுமானதாக இல்லாதபோது, தானாகவே பணத்தை ஆட்சியாளர்கள் அச்சிடத் தொடங்கினர்.
நாடு திவாலாகிவிட்டதாகவும், கடனைச் செலுத்த முடியாது என்றும் ஏற்கனவே அறிவித்ததால், எந்த நாட்டிலும் கடன் பெற முடியாத நிலை, இன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முடிவுக்கு வந்த நடைமுறை

இப்போது எங்களால் பணத்தை அச்சிட முடியாது. நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சிட்டால், நாடு முற்றிலும் வீழ்ச்சியடையும். அவர்களின் கடன் வசதியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் IMF கூறியுள்ளது.
நாங்கள் கடன் பெற்று தொடர்ந்து பணம் அச்சடித்து வந்தோம், ஆனால், அந்த நடைமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
நாட்டை ஆள்பவர் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan