திட்டம் ஒன்றை வகுக்கிறோம்! மகிந்த அதிரடி அறிவிப்பு (Video)
இலங்கை மக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்திற்கான ஆரம்ப அறிக்கையை வெளியிட்ட பிரதமர், புதிய அரசியலமைப்புக்கான வரைவு தற்போது வகுக்கப்படுகிறது. அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்வைக்கப்படும்.
தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. மக்கள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் உரிய நேரத்தில் எட்டப்பட்டது.
மேலும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கமைவாக குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam