எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் தடை ஏற்படும் - நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
வவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் தடை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரும் வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்பு குழாய்களில் அவசர மேம்பாட்டினை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் எதிர்வரும் சனிக்கிழமை நீர் வழங்கல் செயற்பாடானது தடைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், குடியிருப்பு, யாழ்ப்பாண வீதி, சூசைப்பிள்ளையார் வீதி, சகாயமாதாபுரம், தேக்கவத்தை, கற்குழி, மதவுவைத்தகுளம், குருமன்காடு, மன்னார் வீதி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நீர் வழங்கல் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri