வவுனியா நகரில் திருத்தப்பணிகளுக்காக நீர் வழங்கல் செயற்பாடு தடைப்படும் என அறிவிப்பு
வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்பு குழாய்களில் அவசர மேம்பாட்டினை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் நாளை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை நீர் வழங்கல் செயற்பாடானது குறித்த பிரதேசங்களில் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் வவுனியா நகரம், குருமன்காடு, சூசைப்பிள்ளையார் வீதி மற்றும் வைரவப்புளியங்குளம் பகுதிகளில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் குறித்த பகுதிகளில் நீர்வழங்கல் செயற்பாடுகள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.