தண்ணீர் தேவை அதிகரிப்பு: சில பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்
தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதிகபட்ச கொள்ளளவிற்கு தண்ணீர் விடப்பட்டாலும், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் சில நுகர்வோருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
நீர் தேவை
தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போதைய நிலவரத்தில் சில பகுதி மக்களுக்கும், நீர் வழங்கல் திட்டங்களின் முடிவில் உள்ள மக்களுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து நீர் வழங்கல் அமைப்புகளும் இந்த நாட்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி இயங்கி வருகின்றன. மேலும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமான நீர் கொள்ளளவு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan