நீர் கலந்த பெட்ரோல் விநியோகம்: சமூக ஊடகங்களில் வெளியான காணொளி
காலி, பெட்டிகலவத்தை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த பௌசர் ஒன்றின் பெட்ரோலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"இவை இப்போது இறக்கப்படும் பெட்ரோல், தண்ணீர் மட்டுமே உள்ளது. ரூ.338 கொடுத்து எரிபொருள் நிரப்புகிறேன். அவற்றில் நீர் கலக்கப்பட்டுள்ளது என்றும் ஒருவர் காணொளியொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று நாரம்மலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த பௌசர் ஒன்றின் பெட்ரோலில் தண்ணீர் கலக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டது.
Narammala Ceypetco… The bowser which was sent with Petrol, mixed with water, which was asked not to unload. @kanchana_wij for your attention.. pic.twitter.com/862tXot2KT
— Jay.Tissera (@JanithTissera) May 5, 2022
குறித்த பவுசர் கொலன்னாவை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமையாளரொருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 8 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
