கொழும்பில் 9 மணிநேர நீர் வெட்டு
எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் 9 மணிநேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரைப் பெறும் பிரதான குழாயான பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட வேண்டியிருப்பதாலேயே நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதன்படி, காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகாலமைப்பு சபையி்ன் அறிவிப்பு
அதற்கமைய, கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிக்காவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri