எரிவாயு பற்றாக்குறை குறித்து அமைச்சரின் அறிவிப்பு
எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையை அரசாங்கம் தினசரி ஆராய்ந்து வருகிறது.
நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிர்வகிக்க முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
எரிவாயு
இதற்கிடையில், டிசம்பர் 31ஆம் திகதி வரை நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபடி எரிவாயுவை வழங்கும்.

சந்தையில் தற்போது எரிவாயு பற்றாக்குறை இல்லை. இந்த வழியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையில், நாட்டில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது. 3 முதல் 4 மாதங்களுக்கு உபரி அரிசி உற்பத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.