சரும பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடுமையான சூரிய ஒளி சருமங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க தேவையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த நாட்களில் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சூரியன் வலுவாக இருக்கும் 10.00 - 2.00 வரையிலான காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் தற்காத்துக்கொள்ள தொப்பி, குடை போன்றவற்றைப் பயன்படுத்துமாறும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், குழந்தைகளை கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது கட்டாயம் என்றும், சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது எனவும், சன் கிரீம் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam