கொழும்பில் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பில் வாகன உதிரிப்பாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு நகரில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடி உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதிகளவு முறைப்பாடுகள் பதிவு
குறிப்பாக மோட்டர்சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் போன்றவற்றின் கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படுகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக வர்த்தகர்கள் சிலர் வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri