மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் குறித்தும் அறிவுறுத்தல்
சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணங்களை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாக முடித்துவிட்டுத் திரும்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வாகனங்களைச் செலுத்துபவர்கள் போக்குவரத்துச் சட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிப்பதோடு, அதிக வேகத்தைத் தவிர்த்து, சோர்வு ஏற்படும்போது ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சத்தில் திமுக - 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்.. திக்.. நிமிடங்கள்
வலியுறுத்தல்
மேலும், பாதுகாப்பு குறித்து அறியாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறும், இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாத்து குப்பைகளை உரிய இடங்களில் அப்புறப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பணம், தொலைபேசி மற்றும் தங்க ஆபரணங்கள் போன்ற பெறுமதிமிக்க பொருட்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நீங்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை உங்கள் குடும்பத்தினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri