இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் இலவச பரிசுகளை வழங்குவதாக கூறும் செய்திகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யாசிரு குருவிட்டகே இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இந்த மோசடிகளுக்காக பல்வேறு வலை முகவரிகள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் முத்திரை பெயர்களை பயன்படுத்துவது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த போலி செய்திகளின் மூலம், சைபர் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் மக்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளில் ஊடுருவலாம் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இதுபோன்ற போலி செய்திகளை பார்க்கும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் பொதுமக்களை அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
