மற்றுமொரு கோவிட் அலை ஏற்படக்கூடிய அபாயம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மற்றுமொரு கோவிட் அலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரட்ன (Padma Gunaratne) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் நோய்த்தொற்று பரவுகை நிலைமை அதிகரிக்கும் சாத்தியம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மற்றுமொரு அலை ஏற்பட்டால் அது சுகாதாரத்துறைக்கும், பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை அமுல்படுத்துதல், பைசர் தடுப்பூசியை பூஸ்டர் மாத்திரையாக பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் பரிந்துரை செய்துள்ளார்.
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri