மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகளின் படி, இலங்கையின் ஐந்தில் ஒரு பகுதிகள் குறிப்பாக மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் பரந்து விரிந்துள்ள சுமார் 13,000 சதுர கிலோமீற்றர் நிலங்கள் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி நிலச்சரிவுகளின் நிகழ்வுகள் மற்றும் அதிர்வெண் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான மழை
நிலச்சரிவுகளின் அதிர்வெண் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக, திட்டமிடப்படாத நில பயன்பாட்டு நடைமுறைகள் மற்றும் திட்டமிடப்படாத பயிர்ச்செய்கை, பொறியியல் அல்லாத கட்டுமானங்கள், நீர்வழிகளைத் தடுப்பது, காடழிப்பு மற்றும் மனித தலையீடு என்பன கூறப்பட்டுள்ளன.
மொரட்டுவை புவி வள பொறியியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலங்கை புவியியல் நிறுவகத்தின் தலைவருமான பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறியின் தகவல்படி, இலங்கையின் காலநிலை அரை வறண்ட காலநிலையிலிருந்து மிதமான வெப்பநிலை வரை மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவுகள் பெரும்பாலும் தொடர்ச்சியான மழையால் மற்றும் அதிக மழையால் நிகழ்கின்றன.
இந்தநிலையில், சரிவான பரப்புகளில் அல்லது கட்டிடங்களின் சுவர்களில் திடீரென வெடிப்பு மற்றும் விரிசல் படிப்படியாக விரிவடைவதே நிலச்சரிவின் அறிகுறிகளாகும் என்று மொரட்டுவை புவி வள பொறியியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலங்கை புவியியல் நிறுவகத்தின் தலைவருமான பேராசிரியர். ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
