ஹிஸ்புல்லாவால் இஸ்ரேலியர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை செய்தி
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது அந்த அமைப்பு இஸ்ரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான எலிஜா மேக்னியர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலானது மிகவும் ஆபத்தான போக்கை எடுத்துக்காட்டுவதாக எலிஜா மேக்னியர் கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பாரிய நகரமான ஹைஃபவில் கடற்படை தளம் இரசாயனத் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுவதால் இந்த தாக்குதலானது பாரிய விளைவுகை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம்
இந்நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவால் ஏவப்பட்ட 5 ஏவுகணைகள் துறைமுக நகரமான ஹைஃபாவை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஒரு உணவகம், வீடு மற்றும் பிரதான வீதி ஒன்றும் சேதமடைந்ததில் ஐந்து பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri