பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இயோவின்(Eowyn) புயல் வீசக்கூடும் என்பதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் பிரித்தானியாவில் ஏற்படவில்லை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் நாளை(25.01.2025) வெள்ளிக்கிழமை தொடருந்து சேவைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் இரத்து
அத்துடன், தொடருந்து பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து சேவைகள் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரித்தானியாவின் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள பாடசாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் நாளை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புயல் காரணமாக நாளை அயர்லாந்துக்குச் செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri