இஸ்ரேல் வேலை வாய்ப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக உறுதியளிக்கும் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இந்த மோசடி குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு
அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி பணம் செலுத்தியவர்கள் இஸ்ரேலில் எந்தவொரு உத்தியோகபூர்வ வேலை வாய்ப்புகளுக்கும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேலில் முறையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே தேவை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மாத்திரமே இந்தக் கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
