கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்காக நிறுத்தப்படும் உணவகங்கள்தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் வண்டிகள் உணவுக்காக நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரத்தில் குறைந்த 57 ஹோட்டல்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இத்தகைய ஹோட்டல்களின் தரத்தையும் உணவுப்பொருட்களின் விலை மட்டங்களையும் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
ஐந்து ஹோட்டல்கள்
இந்த நடவடிக்கையில் பொது சுகாதார உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் குறைந்த தராதரங்களுடன் இயங்கிய ஐந்து ஹோட்டல்கள் இனங்காணப்பட்டன.
இத்தகைய ஹோட்டல்களில் பஸ் வண்டிகளை நிறுத்த வேண்டாம் என சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் பல பஸ் சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri