இலங்கையிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும் பொதுமக்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கைப் பாதுகாக்க இரண்டு காரணி அங்கீகாரத்தை (Enable 2 factor authentication to secure WhatsApp account ) செயல்படுத்துமாறு கோரியுள்ளது.
உங்களுக்கு 6 இலக்கக் குறியீடு தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு ஒரு வாட்ஸ் அப் செய்தியைப் பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். அறியப்பட்ட தொடர்பிலிருந்து செய்திகள் வந்தால், அவர்களின் கணக்கும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
அத்துடன் வாட்ஸ் அப் கணக்கைப் பாதுகாக்க 2 காரணி அங்கீகாரத்தை இயக்குமாறு என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணையகம் பயனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam