போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையில் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை மக்கள் விடுதலை முன்னணி வழங்கியுள்ளது.
அதன்படி பொறுப்பு கூறுவதற்கு எவருமற்ற ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு்ளளது.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,
நாட்டில் பாரதூரமான நெருக்கடி நிலைமையே நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஒவ்வொரு கணமும் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானதொரு தருணத்தில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஏனையோர் இந்த அடக்குமுறைக்கு எதிராக உணர்வுபூர்வமாகவும் அமைப்பு ரீதியாகவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு அமைப்புக்களுக்கும், இயக்கங்களுக்கும் பொது மக்களுக்கும் உரிமை உண்டு.
ஆனால், எந்தப் பொறுப்பும், அமைப்பாளரும் இல்லாத, ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில் இதுபோன்ற பொறுப்பு கூறுவார் அற்ற பொதுப் போராட்டங்களுக்குப் பின்னால் கூட ஆபத்து இருக்கலாம்.
அதேவேளை சுயமாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் இலாபம் தேடும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் செயற்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
