புலம்பெயர் சமூகம் இலங்கையில் இதனைச் செய்ய வேண்டாம்! வெளியான எச்சரிக்கை (VIDEO)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை செய்யக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகம் துன்பப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை இலங்கையில் கண் மூடித்தனமாக கொட்ட முடியாது என்பதுடன், இலங்கை தொடர்பில் அவர்களிடம் காணப்படும் நிலைப்பாடு, அச்சம் ,வெறுப்பு நியாயமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து ளெியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க என்பவர் மக்களையும்,ராஜபக்ச குடும்பத்தினரையும் காப்பாற்ற வந்தவர் அல்ல. அவர் தன்னையும் தனது கட்சியையும் சார்ந்து பிரதமர் பதவிக்கு வந்தவர் என்பதே உண்மை.
அதாவது கோட்டாபயவின் பெயரை உச்சரித்து அரசியலுக்குள் வந்த இளம் உறுப்பினர்கள் தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற பயத்தினால் ரணிலை தற்போது தலைவராக ஏற்று தமது பதவிகளை தக்கவைத்துக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam