போர் வெற்றியை கொண்டாடுவது அவசியமானது
30 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டியது அவசியமானது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதிகளை தோல்வியடைய செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் உலகில் சுமார் 32 நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் வெற்றி வெறுமனே கிடைக்கப்பெற்ற வெற்றி கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சுமார் 29000 படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 14000 படைவீரர்கள் ஊனமுற்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களது இளமைப் பருவம் போருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த போர் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். பயங்கரவாத தலைவர்கள் அப்பாவி தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர் என தெரிவித்துள்ளார்.
அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தினரிடம் சரணடைய முற்பட்டபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு லட்சத்து 95 ஆயிரம் தமிழ் மக்களை படை வீரர்கள் மீட்டு போரில் வெற்றி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய பணய கைதிகளை மீட்ட சம்பவமாக இது கருதப்பட வேண்டும் எனவும் இது ஓர் உலக சாதனை எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த போர் வெற்றியின் முழு கௌரவமும் எமது படைவீரர்களை சாரும் என தெரிவித்துள்ளார். எனினும் இன்று நாட்டின் ஆட்சியாளர்கள் படை வீரர்களை, படை வீரர்கள் என அழைப்பதற்கு தயங்குவதாகவ அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் சமாதானத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் படை வீரர்களை மதிப்பதாகவும் அது படைவீரர் என்ற வகையில் தமக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.