கொழும்பு பாடசாலை ஒன்றில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் குவிந்த மக்கள் (Video)
கொழும்பில் பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் பாடசாலை அதிபரை தாக்கிய நபர்களை விடுவிக்க கோரி பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயதேயான செஹன்சா நேற்றைய தினம் (15.11.2023) உயிரிழந்தார்.
இந்நிலையில் சிறுமி உயிரிழப்புக்கு பாடசாலை அதிபரே காரணம் என கூறி அதிபரை தாக்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி கொழும்பு கிரான்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு பெருமளவிளான மக்கள் வருகை தந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செய்தி- டில்ஷான்