லெபனானில் அடுத்தடுத்து பயங்கரம் : வாக்கிடாக்கிகள் வெடித்து 9 பேர் பலி
லெபனானில் (Lebanon) அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் பதிவாகின்ற நிலையில் நாட்டில் வாக்கிடாக்கிகள் வெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றைய தினம் பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 2800 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
எனினும்.பேஜர்கள் அளவிற்கு வாக்கிடாக்கிகள் லெபனானில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
இதேவேளை, அடுத்தடுத்து லெபனானில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
பேஜர் தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாட் மற்றம் இஸ்ரேலிய இராணுவம் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் இன்றைய தினமும் லெபனானில் வாக்கிடாக்கி கருவிகள் வெடித்துச் சிதறியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தின் சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 13 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri