திருகோணமலையில் சுற்று சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நடைபவணி
திருகோணமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமையான நகரை உருவாக்கவும் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் பிரகாரம் இன்று (16)இடம்பெற்ற இந்த நிகழ்வில் "சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை " எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றுள்ளது.
குறித்த நடை பவணியானது திருகோணமலை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருகோணமலை நகரசபை வரை நடை பவணியாக சென்று நகர சபை செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
பசுமையான திருகோணமலை
சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை, வீதிகள் பொது இடங்களில் குப்பை போடாதீர்கள், மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் களை ஒழிப்போம், மரங்களை வளர்ப்போம் தூய்மையான காற்றை சுவாசிப்போம் போன்ற பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் நடை பவணியாக சென்றனர்.
இதில் பொதுமக்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |