புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவது குறித்து கவனம் - மாகாணசபைத் தேர்தல் குறித்து வெளியாகியுள்ள தகவல்
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தேசித்த மாகாணசபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு கூடவுள்ளது.
இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளைமறுதினம் (17) ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை
புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான அழித்தொழிப்பு தாக்குதல் 12 நிமிடங்கள் முன்
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam