மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வ தொண்டர்களால் போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(15.4.2026) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர் களாக 50-இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி சேவையாற்றி வந்துள்ளனர்.
போராட்டம்
இதுவரை காலமும் செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையின் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எந்த வொரு நிர்வாகமும் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன் ஒன்று கூடிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை தன்னார்வ பணியாளர்கள் வாயை சிவப்பு துணியால் கட்டியவாறு பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக இந்த நிர்வாகங்கள் திட்டமிட்டு தம்மை புறக்கணித்து ஜனநாயக விரோதமாக இடைக்கால நிர்வாகத்தை முறைகேடான விதத்தில் அமைத்து பல்வேறுபட்ட நிர்வாக மோசடிகளை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கை
தகுதியின் அடிப்படையில், நியாயமான முறையில் எமக்கான "அங்கத்துவத்தை" உடனடியாக உறுதி செய்தல் வேண்டும்.
முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள "இடைக்கால சபை" கலைக்கப் பட்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான செஞ்சிலுவைச் சங்கத்தின் "யாப்பில்" குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் மன்னார் கிளைக்கும் பொருந்தும் என்பதை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, இதற்கென தனியான "விசாரணைக் குழு" ஒன்றை நிறுவ வேண்டும்.
இடைக்கால சபையை கலைத்து நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகத்தைத் தெரிவு செய்தல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.



என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam