பசிலுக்கு எதிராக மொட்டுக்குள் எழுந்த குரல் - செய்திகளின் தொகுப்பு (video)
அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு ஓடியொழிந்துகொண்டிருந்த பசில் ராஜபக்ச பொதுவெளியில் சுதந்திரமாக வந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு குற்றவாளியென அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பசில் ராஜபக்ச தற்போது மீண்டும் பொதுவெளியில்பேச ஆரம்பித்துள்ளார். போராட்டக்காரர்கள் அமைதியாக இருப்பதே பசிலின் பேச்சுக்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,