இனப்படுகொலையின் வடுக்களை சர்வதேசத்திற்கு பகிரங்கப்படுத்திய தென்னிலங்கை நபரின் குரல்
நடைப்பெற்று முடிந்த தமிழின படுகொலை நினைவுநாளில் தென்னிலங்கை சட்டத்தரணியொருவர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்து அவரது மொழியில் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியமையானது மிகப்பெரிய விடயமாகும் என பத்தி எழுத்தாளர் ஐ.வி.மாகாசேனன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
16 வருடங்களாக வலியை சுமந்துக்கொண்டு இருக்கோமானால் இதன் ஆழம் என்னவென்று பிரதிபலிக்ககூடியதாக உள்ளது.
எனவே இந்த சிங்கள சகோதரரின் செயலின் மூலம் நாங்கள் அவருக்கு நன்றி கூற கடமைப்படுகின்றோம்.
எங்களை புரிந்துக்கொள்ள முடியாமல் சில இனவாதங்களும் தலைதூக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
