சிறையில் அடைக்கப்படும் ஆபத்தில் விளாடிமிர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரித்தானிய நீதித்துறை செயலாளர் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்தார்.
“ரஷ்ய ஜனாதிபதி இப்போது சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். உக்ரைனில் அல்லது ரஷ்யாவில் செயல்படும் ஒவ்வொரு தளபதியும், சட்டவிரோத உத்தரவுகளை எதிர்கொண்டால், அது பொதுமக்களை குறிவைத்து அல்லது வேறுவிதமாக, தளங்களைத் தாக்கினால், அவர்கள் ICC (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) விசாரணை செய்வதை அறிவார்கள்.
சட்டவிரோதமான உத்தரவுகளைப் பின்பற்றினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இறுதியில் சிறையில் முடிவடையும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்க வேண்டும்” என்றார்.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan