தையிட்டி காணி அளவீடு நிறுத்தப்பட்டது! களத்தில் குழப்ப நிலை..
யாழ். தையிட்டி பகுதியில் அமைந்துள்ள காணிகளுக்கான அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, இன்றையதினம்(17) காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், இன்றையதினம் காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் களத்தல் சற்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததுடன், காணி அளவீட்டு பணிகளும் தாமதமாகியிருந்தன.
காணி அளவீடு..
தொடர்ந்து நிலவிய குழப்ப நிலையை அடுத்து, தற்போது காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

காணி அளவீடுகள் நிறைவடைந்ததும், உரிய ஆவணங்களின் அடிப்படையில் காணி உரிமையாளர்கள் யார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri