ஆண்டவன் எமது மகனை கொலைசெய்தவனை காட்டிக்கொடுத்துள்ளார்: பாலசுந்திரம் பெற்றோர் (VIDEO)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆண்டவன் தனது மகனை கொலைசெய்தவனை காட்டிக்கொடுத்துள்ளதாக கொலை செய்யப்பட்ட இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பாலசுந்தரம் என்னும் இளைஞன் 2021. 06. 22 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தபோதிலும் இதுவரையில் எந்தவித நீதிவிசாரணையும் இன்றி வழக்குகள் முன்கொண்டுசெல்லப்படும் நிலையில் இந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் குற்றச்சாட்டுகளை பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றனர்.
வியாழேந்திரனின் தம்பி கைது!! இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார் |
பெற்றோரின் குற்றச்சாட்டு
தனது மகனுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோரரான மயூரன் என்பவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது மகன் படுகொலைசெய்யப்பட்டதான குற்றசாட்டுகளை பெற்றோர் முன்வைத்துவந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் படுகொலைசெய்யப்பட்ட பாலசுந்திரத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நேற்று மாலை இந்த படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொல்லப்பட்டவரின் பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரனான சதாசிவம் மயூரன் நேற்று இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் தமது மகன் படுகொலைசெய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதற்கு முன் தமது மகனை கொலைசெய்தவர்கள் வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மேலும், நேற்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்க்கு முன்பாக பாலசுந்தரத்தின் உருவப்படம் வைக்கப்பட்டு சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வீதியில் கிடந்து அழுது தமது கவலைகளையும் பெற்றோர் வெளிப்படுத்தினார்கள்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022