கிண்ணியா படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட தென்கை ஆதீன குருமார்கள் (Photos)
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு உலகத் தமிழர் தேசியப் பேரவை அமைப்பின் உறுப்பினர்களும், மற்றும் தென்கை ஆதீன குருமார்களும் விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் பிரசித்த பெற்ற தென்கை ஆதின குருக்கள் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் (26) கிண்ணியா பிரதேசத்திற்குச் சென்று குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு,பாதிப்புக்குள்ளான குறிஞ்சாக்கேணி பகுதியையும் பார்வையிட்டுள்ளனர்.
இதன் போது கிண்ணியா பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி (A.S.M.Azmi) மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |



உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 23 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri