குறிஞ்சாக்கேணி பகுதிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா விஜயம் (Photos)
பெரும் துயரினை எதிர்கொண்ட கிண்ணியா -குறிஞ்சாக்கேணி பகுதிகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா (Ali Zahir Maulana) இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகளது துயரத்தில் நேரடியாக பங்கேற்றதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்தினையும் பார்வையிட்டதுடன் , தற்போது கடற்படையினரால் படகுச்சேவை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்கள் குறித்தும் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் படகுப்பாதை கவிழ்ந்தது முதல் தம்முடன் தொடர்பாடலை பேணியவராக காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரதி கட்டளை அதிகாரி கொமாண்டர் பூஜித விதானுடன் எதிர்கால மக்கள் நலன் பேணும் முன்னெடுப்புக்கள் குறித்து கலந்துரையாடியதுடன் அதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam