இலங்கை விசா தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை! கிடைத்தது அனுமதி
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் விசா முறைமையை இலகுப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைய எமது நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் வருகை தரு விசா, வதிவிட விசா மற்றும் பயண விசா என 3 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
வீசா வகைகளில் காணப்படும் சிக்கல்
வருகை தரு விசா மற்றும் வதிவிட விசா ஆகிய 2 வகையான விசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற விசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகளவிலான வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கின்ற விசா முறைகளை கருத்திலெடுத்து எமது நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சமகாலத்தில் நிலவுகின்ற விசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri