இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்
விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்காக, அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் இஸ்ரேலில் இருக்கும் இலங்கை தூதரகத்தில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்சோ உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் இலங்கை தூதரகத்துக்கு வந்து, தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.
கோரிக்கை
இதன்போது விசா காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களின் விசா அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு இஸ்ரேல் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் விசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் தங்கி இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை கோரியதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு விவசாய பிரிவில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
