மக்களே அவதானம்! பரவி வரும் காய்ச்சல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
தற்போது பரவி வரும் காய்ச்சல் கோவிட் வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நோயின் தன்மையை பொறுத்து பல்வேறு வகைகள் இருக்கலாம் அதுதான் இந்த நோயின் தன்மை.புதிய ரகங்கள் உருவாகி வருகின்றன. ரகங்களைப் பற்றி நமக்கு நல்ல புரிதல் இல்லை. ரகங்களை ஆய்வு செய்து அவற்றின் அறிக்கைகளைப் பெற நேரம் எடுக்கும்.
கோவிட் நோயிலிருந்து வேறுபடுத்துவது கடினம்
இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற அனைத்து நாட்டிலும் அதிகமான கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
குறிப்பாக இது இன்ஃப்ளூவென்ஸா போல பரவுவதால், அவற்றை கோவிட் நோயிலிருந்து வேறுபடுத்துவது கடினம் எனவே கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட அதே சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக முகக்கவசம் சரியாக அணிவது மிகவும் அவசியம்.
தொடர் மழை காரணமாக பல்வேறு வைரஸ் நோய்கள் பரவி வருகின்றது.
இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், அவற்றை ஒருவருக்கொருவர் வேறுபடுத்துவது கடினம்.
சுகாதார வழிகாட்டுதல்கள்
இருப்பினும் மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம்.
இதேவேளை எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காய்ச்சல் இருந்தால், கண்கள் சிவப்பாக இருந்தால், சதைகளில் வலி இருந்தால், சிறுநீர் கருமையாக இருந்தால், இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சரியான சிகிச்சையின் மூலம் நோயின் சிக்கல்களைத் தடுக்கலாம்.”என கூறியுள்ளார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
