யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் - அடித்து நொறுக்கப்பட்ட வீடு
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(27.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக வெடித்த வன்முறை
நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால் பணம் வாங்கியவர்களுக்கும், பணத்தை கொடுத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு வேளையில், வீட்டிற்குள் நுழைந்த கும்பல், வீட்டை தாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan