பொதுக்கடன் மறுசீரமைப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு
பொதுக்கடன் மறுசீரமைப்பு தொடர்பான எந்தவொரு உடன்படிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபடுவதைத் தடுக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டக் கூட்டணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே நேற்று (20.09.2024) உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டின் அடிப்படையில் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் பொருளாதார தீர்வுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் உறுதியான தீர்வுகள் அல்ல என தாம் உறுதியாக நம்புவதாக மனுதாரர், தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வெளியேறு ஐஎம்எப்
எனவே, 'வெளியேறு ஐஎம்எப்' இயக்கத்திற்கு தாம் தொடர்ந்து ஆதரவளித்து தலைமைத்துவத்தை வழங்குவதாக முதலிகே தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

பசில் - நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
