பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Steephen May 14, 2022 06:27 AM GMT
Report

பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி சிங்கள சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை என்றாலும் பணத்தை அச்சிட நேரிடும். பணத்தை அச்சிடவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது.

மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். ஆங்கிலேயர்கள் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் கூட இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.

இந்த ஆண்டே எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசாங்கத்திற்கு வருமானம் கிடையாது. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால், வருமானம் குறையும்.

ரூபாய் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணியுடன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், வரியை செலுத்த முடியாது. வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை | Vincent Churchill War Sri Lanka Crisis

அந்நிய செலாவணி நெருக்கடியால், ரூபாய் கிடைக்கும் வருமானமும் கிடைப்பதில்லை. தற்போதைய நிலைமையில் சுமார் மூன்று பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுகிறது.

இதனை பெற்றுக்கொள்வதே எமக்கு இருக்கும் முதலாவது சவால். அதனை பெற்றுக்கொள்ளவே நான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

நாட்டில் வரிசைகளை இல்லாமல் செய்ய வேண்டும். சாதாரண இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மூன்று வேளையும் சாப்பிட வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நடுத்தர வகுப்பு மக்களை முன்னேற்ற வேண்டும். உழைக்கும் மக்களின் வீடுகளுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களை கொள்வனவு வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

1977 ஆம் ஆண்டு நாங்கள் இப்படியான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினோம். மின்சாரம் இன்றி 2001 ஆம் ஆண்டு எமக்கு இருண்ட யுகமாக இருந்தது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அவற்றையும் நான் முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை முன்நோக்கி இட்டுச் சென்றேன். 2015 ஆம் ஆண்டும் நாம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்தோம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.

நான் பிரதமராக பதவியேற்ற காலங்களில் மூன்று வேளையும் மக்களுக்கு சாப்பிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தேன். சிறப்பாக வாழ வழியை உருவாக்கினேன்.

பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை | Vincent Churchill War Sri Lanka Crisis

தொழில் வாய்ப்புகளை உருவாக்கினேன். தற்போது இந்த சவாலை ஏற்று மக்களுக்கு சிறந்த வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்க நான் எதிர்பார்த்துள்ளேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை செய்ய முடியும். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் 1939 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்களே இருந்தனர். எனினும் பிரதமராக பதவியேற்று போரையும் வென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

May you like this Video


நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US