நீண்ட நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள கிராமம்
கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து முடக்கப்பட்டிருந்த வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தின் ஒர் பகுதி இன்று மதியம் முற்றாக விடுவிக்கப்பட்டது.
வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தில் அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் சகாயமாதாபுரம் கிராமம் கடந்த மாதம் (05.06.2021) ஆம் திகதி கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.
குறித்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் கோவிட் பரவலை தடுக்கும் முகமாக பயணத்தடை விதிக்கப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருந்த குறித்த கிராமத்தின் அச்ச நிலை குறைவடைந்த பின்னர் 22 நாட்களின் பின் கிராமத்தின் சில பகுதிகள் கடந்த (25.06.2021) விடுவிக்கப்பட்டிருந்தன.
எனினும், அக்கிராமத்தில் மேலும் சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கிராமத்தின் குறித்த ஒரு பகுதி மாத்திரம் தொடர்ந்து முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் (06.07) சுகாதார பிரிவினர் அக்கிராமத்தில் 30க்கு மேற்ட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதுடன் அவர்களின் பெறுபேற்றில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தியதன் பின்னர் கிராமத்தில் முடக்கப்பட்ட ஒர் பகுதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டது.
சகாயமாதபுரம் கிராம் ஒரு மாதத்திற்கு பின்னர் முற்றாக விடுவிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
