பகல் கணவு காணும் ரணில்: அநுர தரப்பு சாடல்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி மூன்று மாத காலங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலதிகமாக அவர்களுக்கு எதனையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.
டொலரின் பெறுமதி
தற்போதைய அரசாங்கத்தால் ஆட்சி நடாத்த முடியாது என ரணில் பகல் கனவு காண்கிறார். இதற்கு முன்னரும் அவர் பகல் கனவுகளை கண்டார். டொலரின் பெறுமதி 400 ரூபா வரை உயர்வடையும் என்றெல்லாம் கூறினார்.
ஆனால், இன்று டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளது. எனினும், கனவு காணும் உரிமை அவருக்கு உள்ளது. அவர் நன்றாக கனவு காணட்டும்.
இதேவேளை, மற்றொரு புறம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறும் நகைச்சுவையான கருத்துக்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
