தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்
தமிழ்நாடு தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியை உருவெடுத்தாலும் கூட பெரும்பான்மை கிடைக்காததனால் அவர் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியான நிலையில் த.வெ.க. கட்சி முன்னிலை வகித்து வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
100+ எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடியுள்ளார்.

அதேநேரம் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் 100+ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பது விஜய்க்கு சவாலையே கொடுக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அவருக்கு எதிராக சட்டசபையில் அமரப்போகும் திமுக மற்றும் அதிமுகவின் அந்த 100க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி வரிசை என்பது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
புதிய சதுரங்க வேட்டை
இருப்பினும், பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவை நாட திட்டமிடப்பட்டுள்ளதுடன், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மை இல்லாத ஒரு அரசை நடத்துவது என்பது சிக்கலான விடயமாக பார்க்கப்படுகின்றது.

மேலும், பெரும்பான்மை ஆட்சி மைந்தால் கூட்டணிக்கட்சிகளின் திட்டங்கள், முக்கியமான துறைகளைக் கேட்பது முதல் நிர்வாக மாற்றங்கள் வரை கூட்டணிக் கட்சிகள் கை ஓங்கி இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், விஜய்யின் இந்த வெற்றி அவரது மக்கள் செல்வாக்கை நிரூபித்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட பலம் கொண்ட எதிர்க்கட்சியைச் சமாளிப்பதும், கூட்டணிகளைச் சமாளிப்பதும் ஒரு புதிய வகை சதுரங்க வேட்டையாக பார்க்கப்படுகின்றது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்