மே 18..! முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் விஜய்யின் முடிவு இதுவே..
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இனப்படுகொலை தினமாக முதலமைச்சர் விஜய் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவுடன் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.
நேற்று(13.05.2026) சட்டசபையில் பேசும் பொழுது தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், சட்டசபையில் மேற்கண்டவாறு கோரிக்கை முன் வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஐபிசி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதும் தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை விளக்கமாக கூறியுள்ளார்.
கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமை இருக்கிறது. எதிர்வரும் 18ஆம் திகதியை இனவழிப்பு தினமாக அறிவிக்குமாறு கட்சி சார்பில் நான் தமிழக சட்டசபையில் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

அதனை தமிழக முதல்வர் விஜய் காதுக் கொடுத்து கேட்கும் வகையில் உள்ளார். இனப் படுகொலை நடந்த சமயத்தில் இலங்கையில் நான் இருந்தேன். அதன் பின்னரே படகு மூலம் இந்தியாவுக்கு சென்றேன். இதனால் இலங்கை தமிழர்களின் வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
இது போன்று தமிழக அரசியலில் என்னென்ன விடயங்கள் இலங்கை தமிழர்களுக்கு சார்பாக இருக்கிறது என்பதையும், மே 18ஆம் திகதி இன அழிப்பு வாரமாக பிரகடனம் செய்வதற்கு விஜய் ஒப்புதல் கொடுத்தாரா? என்பதை காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam