தமிழக அரசியலில் தொடரும் குழப்ப நிலை : சற்று நேரத்தில் வெளியாகவுள்ள அறிவிப்பு
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து, ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியிருந்தார். ஆனால், ஆளுநர் விஜய்யை அழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எனவே இன்று காலை 11 மணியளவில் மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்திருந்தார்.
சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள்
113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. இதையடுத்து விஜய் புறப்பட்டு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்பின் தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this