விரைவில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறப் போகும் நபர்! விக்னேஸ்வரன்
பண்னை நாகபூசணி அம்மன் விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (18.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்ணையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன், உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்பாடு வழங்கியதாக அறிகிறேன்.

சட்டம் யாவருக்கும் சமன்
அவரது முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றது பிரச்சினை இல்லை. “யாழ் மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்றது” என்பதை பொலிஸாரிடம் கேட்க விரும்புகிறேன்.
சட்டம் யாவருக்கும் சமன், சட்டத்தை உரிய முறையில் பொலிஸார் நடைமுறைப்படுத்த வேண்டும்.

முறைப்பாடு வழங்கியவர் யார் என்ற தகவல் இதுவரை வெளிவராத நிலையில் பெரும்பாலும் குறித்த நபர் யாழ்ப்பாணத்தை விட்டு
விரைவில் வெளியேறுவார் போல தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
You may like this video